ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொரு பாடம்
மழை விழும் நிலம் பொறுத்தே நிறம்
பண்பட்ட நிலமதில் விழுந்த விதை விருட்சமாகும்
பசும் சோலை உருவாகும் பறவை கூடும்
களை அகற்றுதல் அவ்வப்போது நடந்தேறும்
களிப்பு அப்போதே மனம் தனில் நிறைவாகும்
கலப்படமில்லா உன் சிரிப்பில் மகிழ்ந்து போகும்
கற்பனை இல்லை நிஜம்தான் நீயும் நானும்
உருவங்கள் சேர்ந்திருத்தல் மட்டுமே வாழ்க்கையில்லை
உணர்வுகள் சேர்ந்திருக்கும் உவகை கொள்ளும்
உன்னை நான் உணர்ந்தாலே தூரம் துச்சமாகும்
உயிர் கலப்புக்கு உடல் தேவை தானோ ?
எத்தனை இன்பம் மடி மீது தலை வைத்து
விடியும் வரை விழித்திருத்தல்
நிலவொளியில் வெட்ட வெளியில் கை கோர்த்து
நடந்து சென்று கடல் மணல் வெளியில்
காலாற நடந்து கை கோத்து காதல்
பெருக்கால் கட்டி அணைத்தல்..நினைத்தாலே இனிக்கும் !
உண்மை அன்புக்கும் உண்மை காதலுக்கும்
உறக்கமில்லை நீ விழித்தால் நான் விழித்து
நீ தும்மினால் நான் உணர்ந்து
நீ சிரித்தால் நானும் சிரித்து
நீ சோகமுற்றால் நானும் சோகமுற்று
தொடாமலே தூரத்தில் இருந்தும்
உணரமுடியும் உன்னதமும் அது தான்
திங்கள், 6 ஆகஸ்ட், 2007
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)