வெள்ளி, 22 டிசம்பர், 2017

எம்மோடு ஒன்றியது

விடியலில் வீசிடும் குளிர்காற்று
உதிக்கும் கதிரவனின் செந்நிறக் கீற்று
கூட்டைத் துறந்த புள்ளினங்கள் ஓசை
மார்கழித் திங்களில் மாக்கோலம் நடுவே பூசணிப்பூ
ஏர்க்காலில் காளைகள் பூட்டி ஏய் என்ற ஓசை
என்றுமே எங்கள் கிராம
வாழ்க்கை
எளிதானது எம்மோடு ஒன்றியது !

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடற்கரை

கடற்காற்று காலம் கடந்த காற்று
காதல் வயப்பட்டோர்
காசு பணமற்றோர
காரிகையோடு கைகோர்ப்போர்
காரில் கானம் கேட்போர்
காலாற நடப்போர்
காவியம் படைப்போர்
காற்று வாங்க வருவோர்
கன்னியர் காளையர்
கடலோடும் மணலோடும்
கலந்தாடும் சின்னஞ்சிறியோர்
இவையாவும் இங்குண்டு
இரவென்ன பகலென்ன!