வெள்ளி, 22 டிசம்பர், 2017

எம்மோடு ஒன்றியது

விடியலில் வீசிடும் குளிர்காற்று
உதிக்கும் கதிரவனின் செந்நிறக் கீற்று
கூட்டைத் துறந்த புள்ளினங்கள் ஓசை
மார்கழித் திங்களில் மாக்கோலம் நடுவே பூசணிப்பூ
ஏர்க்காலில் காளைகள் பூட்டி ஏய் என்ற ஓசை
என்றுமே எங்கள் கிராம
வாழ்க்கை
எளிதானது எம்மோடு ஒன்றியது !

கருத்துகள் இல்லை: